×

ரேஷன் கடையில் கூடுதல் கரும்பு இருந்தால் இலவசமாக வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பின் ஓர் அங்கமாக வழங்கப்படும் செங்கரும்புகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ளவற்றை ஒரு கரும்பு ரூ.24 என்ற விலைக்கு விற்று அந்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

பல கடைகளில் கரும்பு இருப்பு இல்லை என்று கூறி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் எஞ்சிய கரும்புகளை விற்க கூறுவது நகைப்புக்குரியது. கரும்புகள் எஞ்சி இருந்தால் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் கரும்பு வழங்கப்படாத மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கும் கூடுதலாக கரும்பு இருந்தால் இலவசமாக வழங்க வேண்டும். மாறாக விற்று பணத்தை செலுத்தும்படி பணியாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

 

The post ரேஷன் கடையில் கூடுதல் கரும்பு இருந்தால் இலவசமாக வழங்க அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Tamil Nadu ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...